புதன், ஆகஸ்ட் 24

சிங்கப்பூரின் புதிய ஸ்கை பார்க்.உச்சி வானில் ஒரு நீச்சல் தடாகம் திறக்கப்பட்டது....

சிங்கப்பூரில் செந்தோசா சுற்றுலா பூங்காவுக்கு அருகில் பிரமாண்டமான ஸ்கை பார்க் திறக்கப்பட்டது.

மரினா பே சாண்ட்ஸ் என அழைக்கப்படும் இந்த ஸ்கை பார்க், தரையிலிருந்து 200 மீற்றர் உயரத்தில், மூன்று கட்டிட
தூண்களால் தாங்கப்பட்டிருக்கிறது. உலகின் விலையுயர்ந்த சூதாட்ட மையங்கள், பார்கள், உணவகங்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதுடன்,  150 மீட்டர் நீளமான திறந்தவெளி நீச்சல் தடாகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சென்று நீச்சலடித்தால், உச்சி வானில் பறந்துகொண்டு நீந்துவது போல ஒரு பிரமிப்பை உணர்வீர்கள்
மேலும் நவீன கலை அம்சம் பொருந்திய அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக இருக்கின்ற போதிலும், சிங்கப்பூரின் சுற்றுலாத்துறை ஐரோப்பிய நாடுகளுக்கு
இணையாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு இந்த ஸ்கை பார்க்கும் ஒரு நல்ல சான்று!

உலகின் சுற்றுலா மக்களின்  பெரும் ஆதரவை பெற்று வருகுறது இந்த சுற்றுலா பூங்கா….

கருத்துகள் இல்லை: