வெள்ளி, அக்டோபர் 21

பாலாடைக்கட்டி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்!!!

பெரும்பாலானவர்கள் தங்கள் உணவில் பாலாடை கட்டிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீர் பையில் புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர். சிறுநீர் பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 200 பேரிடமும், புற்று நோய் பாதிக்காத 386 பேரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் தினமும் 53 கிராம் பாலாடை கட்டியை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு சிறுநீர் பை புற்றுநோய் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 53 கிராமுக்கும் அதிகமான சொக்லேட் சாப்பிட்டு வந்தனர்.
அதில் சேர்க்கப்பட்டிருந்த பாலாடை கட்டியால் இது உண்டானது தெரியவந்தது. அதே வேளையில் அதிக அளவு ஆலிவ் ஆயில் சேர்ப்பவர்களுக்கு பலவித நோய் பாதிப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: