வெள்ளி, அக்டோபர் 21

கடல் தாவரத்திலிருந்து உப்பு தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை!!!!

இங்கிலாந்தின் ஷெபீல்ட் ஹாலம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உப்புக்கான மாற்றுப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம், வலிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
தொடர்ந்து அதிகரிக்கும் உப்பின் அளவு சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தலாகும். உப்பால் ஏற்படும் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க உப்பின் அளவை வெகுவாக குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த தொடர் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வு ஒன்று உப்புக்கான மாற்றுப் பொருளை கண்டுபிடித்துள்ளது. கடல் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த உப்பு உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு வித வாசனையுடன் இருக்கும் இது சிறு படிகங்களாக உள்ளது. அதிக சத்துக்களை உள்ளடக்கியது. பருமனை குறைக்கவும் இதை பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. உணவு, பேக்கரி தயாரிப்பில் பயன்படுத்தலாம். இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கருத்துகள் இல்லை: