வெள்ளி, அக்டோபர் 21

புற்று நோய்க்கு மருந்தாகும் தக்காளி!!!!

சமையலுக்கு உபயோகப்படுத்தும் சாதாரண தக்காளியில் செலினியம் என்ற சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த பொருள் புற்றுநோயை தடுக்க உதவுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரேசில் பருப்பு, மீனில் தாதுக்கள் உள்ளன. இவை தைராய்டு சுரப்பிக்கு மிக முக்கியமானதாக உள்ளது. தற்போது பிரிட்டன் சந்தைக்கு வந்த சூப்பர் தக்காளி 300 கிராம் 1.99 பவுண்ட்டிற்கு விற்கப்படுகிறது.
பிரிட்டன் உணவுகளில் இல்லாத கூடுதல் செலினிய தாது சத்துக்கள் இந்த புதிய தக்காளியில் உள்ளன. ஊட்டச்சத்து அமைப்பின் மருத்துவர் கரினா நோரிஸ் கூறியதாவது: செலினியம் நோய் எதிர்ப்புச் சக்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவில் போதிய அளவு செலினியம் இருக்கும் போது புற்றுநோய் அபாயத்தை தவிர்க்கலாம். இந்த சூப்பர் தக்காளிகள் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறுவதற்கு சரியான வழியாக உள்ளது என்றார். பிரிட்டனில் பத்தில் நான்கு பேருக்கு புற்று நோய் அபாயம் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் பேருக்கு இந்த புற்று நோய் அபாயம் அதிகரித்து உள்ளது. தினமும் பிரிட்டன் பெண்கள் 60 மில்லி கிராம் அளவிலும், 75 மைக்ரோ கிராம் அளவிலும் செலினிய தாதுக்கள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கும் குறைவான அளவிலேயே பிரிட்டனில் இந்த தாது உணவை எடுத்துக் கொள்கிறார்கள்.
புதிய வகை சூப்பர் தக்காளியை மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ட்சர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

கருத்துகள் இல்லை: